Jul 27, 2009

பேராசை பெருநட்டம்

பள்ளி நாட்களில் நான் கேட்ட சிறுவர்களுக்கான கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையைப் பாடலாக்கிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதன் விளைவுதான் இது.


எலும்புத் துண்டைக் கண்டதாம்
      எண்ணம் கொண்ட நாயுமே
எலும்பைக் கவ்வி வாயிலே
      வைத்துக் கொண்டு சென்றதாம்

ஆற்றுப் பக்கம் சென்றுமே
      அதன்அ ருகிலே நின்றுமே
ஆற்று நீரில் கண்டதே
      அதுதன் உருவம் தன்னையே!

'தன்னைப் போன்று ஆற்றிலே
      தனியாய் ஒன்று உள்ளதே'
என்று நினைத்த நாயுமே
      எண்ணி மகிழ்ச்சி கொண்டதே!

பிம்ப நாயின் வாயிலே
      உள்ள எலும்புத் துண்டையே
கவ்வ நினைத்த நாயுமே
      வாயைத் திறந்து பார்த்ததே!
                                         - தமிழகழ்வன்

No comments:

Post a Comment