Aug 15, 2010

எட்டின் நடுவே எங்கள் பாரதம்

நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது விடுதலைத் திருநாளன்று எழுதிய கவிதை.

நிலைமண்டில ஆசிரியப்பா

எட்டின்  நடுவே  எங்கள்  பாரதம்
எட்டிய  மகிழ்ச்சிக்  களவே  இல்லை
அந்நியர் நீங்கி அன்று சென்றனர்
இந்தியர் கொண்ட ஒருமைப் பாட்டால்
பழிநிலை மாறிடப் பழுத்தார் மக்கள் 
இழிநிலை மாறிட இழுத்தார் செக்கு 
இமயம் குமரி எல்லை என்று 
அமைந்த பார தப்பெரு நாடு 
பலவளங் களுடன் பலமாய்த் திகழ்ந்தது
அலையென வந்த ஐரோப் பியரால்
வளங்குன் றியது; வறுமை யடைந்தது;
அளவில் லாமல் அனுபவித்த திடுக்கண்
அந்நியர் தாக்கம் அழிந்தது ஆக்கம் 
வந்தவர் போனபின் வந்தது ஊக்கம் 
எழிலார் இந்தியம் இழந்தசு தந்திரம்
எட்டின் நடுவே ஈட்டிய தாயினும் 
இன்னும் மலரா இந்திய நாடு 
என்றும லருமோ? யானறி யேனே
வந்தவர் போனார் வறுமை போகலை!
சந்தம் பாடினும் சமத்துவ மாகலை!
இந்நிலை தொடரின் இடுக்கண் தொடரும் 
அந்நிலை மீண்டும் அடைத்த லாகும்
                                           - சுப்பிரமணிய தமிழகழ்வன்

  
இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

1 comment:

சரவண வடிவேல்.வே said...

ஒரு புனைவு எழுதலாமே???

Post a Comment