Aug 22, 2010

உயர்தமிழே!

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
ஓங்குமலை தானளிக்க ஓசையொடு பாயருவி
ஆங்குப்பே ராறாகி அழகாக விரிசோலை
ஓங்கிவளஞ் செழித்தன்ன உளம்புகுந்த உயர்தமிழே!
தேங்குதமிழ்த் தெம்மாங்குத் தேன்பாட்டைப் பாடுவனே!

(தாழிசை)
ஓரணுவாய் உட்புகுந்தே உயருணர்வைக் கிளப்பிவிட்டுப்
பேராற்றல் வெளிப்படுத்தும் பெருவெடிப்பாய் வளர்தமிழே!

புதுமையிலே மோகங்கள் புதுப்பாதை செய்தாலும்
பழமைநிலை குன்றாத பண்போடு வளர்தமிழே!

தொன்றுதொட்டுத் துறைதோறும் துள்ளளொடும் ஏடெதிர்ந்து 
வென்றுவிட்ட ஆற்றலொடும் விண்ணோங்கி வளர்தமிழே!

(தனிச்சொல்)
நீயே

(சுரிதகம்)
என்றும் உள்ளம் ஏத்திப் பாடத்
தென்றல் தானும் தாலாட்ட
நின்றுநின் றாடும் நேயத் தேவே!

2 comments:

அப்பாதுரை said...

அருமை!

சுப்பிரமணி சேகர் said...

நன்றி அப்பாதுரை அவர்களே!

Post a Comment