Feb 27, 2011

இக்காலத் தமிழும் தமிழனும்

தளைகட்குள் தளைப்படாத
எளிய தமிழ் என்றதும்
எதை எண்ணியும் கவலை கொள்ளாமல்
எண்ண ஓட்டங்கள்
ஓங்குமலை மீதிருந்துப் பாய்ந்துவரும் அருவியெனப்
பொங்கிப் பெருகிப் பேராறாய் உருவெடுத்து,
விரிசோலை வளப்படுத்தலைப்போல்
ஒடுங்கிப்போய் ஒளிந்திருந்தவை
ஒளிபெற்று வெளிப்படுதல் உயர்தமிழே! உன்னால்தான்!
உனையன்றி யாரெனக்குப் பேராற்றல் தந்திடுவார்!
இப்படித்தான் இக்காலத் தமிழும் தமிழனும்

No comments:

Post a Comment