Sep 30, 2011

நுதலாளும் நுதற்றோன்றினோனும்

நேரிசை ஆசிரியப்பா

என்னே! கண்டேன் என்னே! கண்டேன்
உன்னில் அவனை உலவக் கண்டேன்
உன்பெயர்ப் பொருளில் அவன்றலை விளங்கும்

உன்னை நினைக்கின் அவன்முகம் தோன்றும்
நதியா றென்றே நவின்றிடின் விளங்கும்
உன்சொல் கேட்கின் உன்பெயர் விளங்கும்
அழகுத் தமிழன் முருகன்
பழகு மொழியாய்! காத லாளே!

               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment