Sep 17, 2011

இலட்சுமணன் - ஜெயா (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

மன்றல் கொள்ள வந்த தலைவ!
தென்றல் உன்றன் உள்ளம்; சொல்லும்
சொல்லும் செம்மை உடைய தாகும்;
வெல்லும் உன்கை! ஆதா ரந்தான்
ஜெயமே கொண்டனை! வேறென் வேண்டும்?
வயப்படும் உள்ளும் உயர்செயல் எல்லாம்
குணமுயர்ந் தோங்கிக் குடிப்பெயர் தாங்கி
மணம்புரிந் திருமனம் ஒன்றி வாழ்க!
வாழ்க நலத்தொடு! வாழ்கபல் லாண்டு!
வாழ்க செம்மை யோடு வாழ்கவே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment