Sep 30, 2011

மாலைமாற்றுக் குறள்வெண்பா

குறள்வெண்பா
மாலை மாற்று

யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா                                                          1

யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா

என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!

நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா                                                       2

நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.

நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.

அரிசி - அரியும் சிவனும்
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்



No comments:

Post a Comment