Sep 17, 2011

செந்தில்நாதன் - அகிலா (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

உள்ளம் களிகூர உறவுத் திரள்சூழ
உள்ளும் செயல்யாவும் உளதாய் நிறைவேறச்
செந்தில் நாதற்குச் செந்தூர் எழில்முருகன்
வந்து பொழியருட்சேர் மன்றல் நலம்காண
அகிலம் உடைத்தான பரிசுப் பெரும்பேறு
முகிலின் அருட்போலும் முழுநில வதைப்போலும்
நிறைந்து பல்லாண்டு நிம்மதி மனமாண்டு
சிறந்து மகப்பேறு சீர்மை சொலவேண்டும்                             (1)
--------------------------------------
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எந்நாளும் பொன்னாளாய் இனித்திருக்க
  ஏற்றங்கள் எப்போதும் கைகொடுக்க
சந்தானம் மன்றுதிரு இராமலிங்கம்
  சிறந்தோங்கப் போற்றுதிரு மதிதுர்கா
சுந்தரமின் னொளிதோன்று வசிமுகிலும்
  ஜோதியொளிர் நலம்யாவும் ஒருசேர
வந்தோரும் வாழ்த்துகவே செந்திலகம்
  அகில்நுதலில்! அகில்நிறைவில்!! குகனருளில்!!!              (2)
                                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment