Oct 7, 2011

வாழ்த்து

சொல்லுமிதழ் சீர்ச்சந்தம் சோலை மலரத்
    தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
    இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
    நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
    பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!

0 comments:

Post a Comment