Jan 11, 2012

கடல், கல்வி

ஆம்... சொல்லு பா...!

சுப்பிரமணி, கவிதை வேணுமாம்.. கல்வி, கடல்-ங்கற தலைப்புல.

ஆ... (அதிர்ச்சி..), எப்ப வேணுமாம்.

இப்பவே வேணும், நாளைக்குப் பள்ளிக்கூடத்துல கவிதைப் போட்டியாம்.
எட்டு வரியில வேணுமாம்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

சின்ன புள்ள கேட்குது, பத்தாவது தான் படிக்குது. எதோ புரிய மாதிரி எழுதிக் கொடுப்பா...

சரி எழுதிட்டு கால்(call) பண்றேன்.

ஓகே பா... பை.

வீட்டில் வேறு ஒரு பிரச்சினை பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அரைகுறை மனத்தோடு சிந்திக்கத் தொடங்கினேன்.

கல்வி

உள்ளம் உயர்வுபட
உலகம் விரலில்விழக்
கொள்ளும் செயல்யாவும்
குறைவு ஏதுமின்றித்
திறமை வெளிக்கொணர்ந்து
திண்மை உழைப்புயர்ந்து
சிறப்புப் பெற்றிடுதல்
சீர்மைக் கல்வியினால்
ஒருங்கமை மனம்பெறுதல்
உயர்ந்த கல்வியினால்.


கடல்

நிலவளம் நன்மைபெற
நீலவளம் தரும்கொடையே
கலைவளம் கவினுறவே
கணக்கரிய பொருளீவாய்

விண்ணீர் விரைந்துவந்து
மண்ணீர் எனமாறும்
ஓயாத சுழற்சிக்கு
உயரா தாரம்நீ

இயலும் இவ்வுலகில்
எவ்வகை விளைவுக்கும்
ஏது என்னென்றால்
அழகிய கடல்நீதான்

உன்னுள் உள்ளவை
எண்ணவும் கணக்கரிது
உன்னுள் உறைந்தவையால்
உள்ளமும் கனத்துரிது.

0 comments:

Post a Comment