Mar 30, 2012

அருணா நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

குறளடி வஞ்சிப்பா

பொற்றாமரை நிற்றாமரைப்
பொழிலோவியம் எழிற்காவியம்
நற்பேருளம் உற்றாயுனைக்
கற்றார்கவிப் பொற்கோவிறை
உற்றேநலம் பெற்றேயுயர்
செஞ்சொற்றிறம் கொஞ்சுந்தனி
அஞ்சேலென நெஞ்சுக்குரை
பல்லாண்டிவண் நல்லாசியோ
டெல்லாமுறு நல்லாயிவள்
எனவாங்குப்
பிறந்த நாணல் வாழ்த்து
சிறந்த குறளடி வஞ்சி வாழ்த்தே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

Aruna said...

Thank you :)

Post a Comment