Jul 3, 2012

அகழ் அகத்தான்

நேரிசை ஆசிரியப்பா

எனக்கு யானே நவிலு நல்லுரை
தனக்குள் விருப்ப மளவற நிரப்பித்
தன்வழி தனிவழி தன்னிக ரெவரினிச்
சென்றிடு தலுயர் வாழ்க்கை யன்றெண்
ணொழுக்கந் தலையா யுடன்பிற வெல்லாம்
இழுக்கொன் றிலதா யினிமை யுளதாய்ச்
செழித்திடச் செய்தல் வாழ்க்கை
விழித்திடு தமிழா வகழகத் தானே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்