Apr 12, 2013

Subramani with Ponmani in Germany!

கலிவிருத்தம்

எண்ணத்(து) அலைகள் எப்போதுங் கண்ணில்
வண்ண மலர்கள் வாஞ்சையொடு நெஞ்சில்
கன்னல் மொழிகள் காதோரம் ஒலிக்கும்
சென்னியும் பாதமும் சிரமத்தில் தவிக்கும் 


தும்மல் இருமல் தனித்தன்மை பெறூஉம்
செம்மல் விம்மல் ஒருசேரத் துடிக்கும்
அம்மல் லலல்ல லள்ளல்செய் நெல்லும்
எம்முனைப் புந்தான் எண்ணத்திற் காதல்
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி

2 comments:

Post a Comment