Jun 4, 2013

நீயும் நானும் (வஞ்சி விருத்தம்)

யாமாமா நீயா மாமா?
நீயாமா நானீ யாமா?
நானானே நீநீ யாமே!
நானேனோ நீயா யாமே!

                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
யாம் ஆமா? நீ யாம் ஆமா?
நீயாம் ஆமா? நான் நீயாம் ஆமா?
நான் நானே! நீ நீயாமே!
நான் ஏனோ நீயாய் ஆமே?

பொருள்:
நீ நானாக ஆக முடியாது, நான் நீயாக முடியாது;
நான் நானாகத்தான் இருக்க முடியும், நீ நீயாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் நான் ஏனோ நீயாகத் துடிக்கின்றேன்?

No comments:

Post a Comment