Aug 5, 2013

பழம்பொருள் நீ

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

நெடுநாள்கள் கடந்துதொடங் கும்பாடல் இதன்வழியென்?
துயரெல்லை யோ?வினிமை யோ?வென்ன? யானறியேன்
யாரென்றன் மனமமைதி பெறவுரைப்பார்? இச்செய்தி
அவள்செவிக்கெட் டிடநானு ரைத்தக்கால் அந்தோ?                       1

'பழம்பொருணீ  பாரீசைப் பார்க்கச்சென் றிடத்தாஅன்
அழைத்ததியார்? அறியாய்நீ யுலகினிலே யாதொன்றும்'
களிப்புடனே கலாய்த்துரைத்தாய் அதுதானுண் மையெனினும்
ஏனுள்ளே னிங்ஙனம்யான்  எவ்வாஅ றுரைப்பேனோ?                   2

என்சொல்ல வாயெடுத்தும் என்னெண்ணம் அதைச்சொல்ல 
யாருணர்வார்  ஆனாலும் அவர்தம்சொல் லஃதொன்றில்
உறுதியுடன் உள்ளாற உளமுரைப்பார் வளமுரைப்பார்
மாற்றமெலாம் காற்றலையாய் அதிவிரைவில் வந்திடுமோ?    3

ஒருதுருவத் துள்ளத்தை மருதுருவ மாய்க்காட்டி
ஒருநொடியில் யார்மாற்ற முடியுமிவண் உரைப்பீரே?
படிப்படியாய்ப் படிபெறவே முடியுமுண்மை வேறென்ன
கடிதிலுளம் கவின்பெறுமா? கடிதேஎ சொல்வீரே                             4
                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்