Mar 29, 2014

அருணா நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

மங்கலச் செல்வி! மரகதக் கல்நீ!
மங்கையர்க் கரசி மதிநிறை வாணி
திங்கள் வதனப் பேரொளிப் பொற்கிழி
சங்கம் நிறைதமிழ் மதுரைப் பைங்கொடி
பொங்கும் உள்ளம் பூரிப் பாலே!
மங்கை உன்மொழி செவிகேட் டாலே!
பேறுகள் பலவும் பெற்று
நூறாண் டுகள்மகிழ் வோடு வாழ்கவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment