Mar 15, 2014

தேங்காய்

தரவு கொச்சகக் கலிப்பா

கொண்டைப் பூவுடையாய்! குளிர்வெண் மையகத்தாய்!
தண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்!
கண்ணும் மூன்றுடையாய்! காணும் விழாவெல்லாம்
பண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே!

                                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment