Mar 25, 2014

நாயகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
       நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
      துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
     வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
      நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment