Mar 15, 2014

தாவரத்தின் தவிப்பு

ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இதயத்து உயிர்க்காற்றுக்கு
ஏங்குவீர்
என்றறிந்தும்
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இவ்வுலகத்து இயன்றிடும்
மிதவெப்பம் கூடிட
அதிஅவதிப் படுவது
அறிவீர் ஆயினும்'
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?


எல்லாவற்றுக்கும்
ஏதோ ஒரு வழிகாணும்
எண்ணம் கொண்டிருப்பினும்
எனைமட்டும் கண்டுகொள்ள
ஏன் உங்கள் எண்ணம்
இடம் கொடுக்கவில்லை?


பச்சைப் பசேலெனப்
பார்க்க மட்டும்
பாரில் நான் வேண்டும்
பாவி மக்காள்!

                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment