Mar 15, 2014

பேரன்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிங்காரச் சென்னையிலே சாயுங் காலம்
    சுறுசுறுப்புச் சாலையிலே சிறுவர்க் கூட்டம்
அங்குமிங்கும் விழிவைத்துக் கடந்து செல்ல
   அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தி ருக்கும்
தங்கையினைத் தன்கையால் தாங்கி நின்று
    தன்பொறுப்பை உணர்ந்திழுத்தே ஏகும் அண்ணன்
தங்கையினைத் தன்கையாய்த் தன்ம னத்தில்
    தானிறுத்திப் பேரன்பை உணர்த்தி னானே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment