Mar 15, 2014

பரமும் வரமும்

கலிவிருத்தம்

விபரம் அறிகிலேன் விவரம் பெறுகிலேன்
வினைகள் பலவுள வியனுல கத்தினில்

தப்பிப் பெருவரம் தானை யானவன்
செப்பிச் சென்றனன் சீர்மை பெற்றிட

                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
மேன்மையான கடவுளை அறிந்திடிலேன்; பெரிய வரங்களையும் பெற்றிடிலேன்; இந்த விந்தையான உலகத்தில் ஆற்ற வேண்டிய செயல்கள் பல உள. படைத்தலைவனாகிய முருகன், இதனை எனக்கு உணர்த்திச் சென்றனன். இதுவே பெருவரம்
வி பரம் - மேன்மையான கடவுள்
வி வரம் - பெரிய வரம்

No comments:

Post a Comment