Mar 29, 2014

தானறியாது ஆனவள்

தரவு கொச்சகக் கலிப்பா

தானறியா தானவளே தானறியா வாணவனுள்
தானறியச் சொல்வானேன் தானறியா தானதன்பின்
தானறிவன் தன்னுள்ளே தானின்றித் தானொன்றா
தானவனைத் தானவனாய்த் தான்கருதித் தகர்த்தாயோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய :
தான் அறியாது ஆனவளே, தான் அறியா ஆண் அவனுள்.
தான் அறியச் சொல்வான் ஏன், தான்  அறியாது ஆனதன்பின் ?
தான் அறிவன் தன்னுள்ளே தானின்றித் தான் ஒன்றாது ஆனவனைத் 
தானவனாய்த் (அரக்கனாய், பகைவனாய்) தான் கருதித் தகர்த்தாயோ? 

No comments:

Post a Comment