Mar 24, 2014

தெளிவு

இழந்தவற்றின் ஏக்கங்களுக்கும்
இன்னல்களின் தாக்கங்களுக்கும்
இனி இங்கே இடமில்லை.
ஆற்றும் முறையில்
ஆற்றத்தக்கவற்றின்
ஆக்கங்களுக்கே
அகமும் அறிவும்
ஆழட்டும் ஆராயட்டும்.

          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment