May 10, 2014

முப்பெருங் கலைமகள்கள் வாழ்க!

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேலோங்கு வெளியீட்டு மேலாண்மைக் குடும்பத்தின்
     முத்தான இரத்தினங்கள் முகிழ்த்தெழுந்த குடும்பத்தின்
வாலான கடைக்குட்டிப் பாப்பாக்கள் செய்தவருஞ்
     சாதனைகேள் தோழர்காள் தோழீகாள் வாருங்கள்
வாழ்த்திடுவோம் வாயார நெஞ்சாரக் கலைவாணி
     மாவருளைப் பெற்றிட்ட பிஞ்சுள்ளக் குழந்தைகாள்!
வாழ்க!பெறும் பதினாறு பேறுகளைப் பெற்றிட்டு!
     வாழ்கதவ வுள்ளத்துக் கல்வியினாழ் தொட்டிட்டு!
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment