Jun 12, 2014

பொன்றுந்துணையுந் துணை

நேரிசை வெண்பா

ஒன்றாஅ உள்ளத் தழுந்தீஇ வேறொன்றும்
நின்றாஅ டாதூஉ நேர்வதென்ன? - பொன்றுந்
துணையும் துணைவரு மாஅத் துணையுள்
அணையும் அணைவரு மா
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பிரித்தறிய:
ஒன்றா உள்ளத்து அழுந்தி வேறொன்றும் நின்றாடாது நேர்வதென்ன?
பொன்றுந்துணையும் துணைவரு மாத்துணை உள்ளணையும் அணை வருமா?


பொருள்:
பொருந்த இயலாது என்ற உள்ளத்தில் அழுந்தி, வேறு எதைப்பற்றியும் எண்ண இயலாத இந்தக் கைக்கிளையில் நிகழ்வதென்ன? கடைசி வரையில் துணையாக வரும் பெருந்துணை என எண்ணும் உள்ளத்தில் பொருந்திய இந்த எண்ணத்திற்குப் பொருந்த வேண்டியவை பொருந்துமா?

No comments:

Post a Comment