Jun 19, 2014

வாசுதேவ கிருஷ்ணன்

கலிவிருத்தம்

இளையான் உள்ளம் இளையான் எனினும்
இளையாய் நிற்பன் இளையா யெண்ணி
இளையா யிகழா தேயுளம் இளைக
விளைய ளந்தான் விளைவாய் நிறைவான்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள் :
இளையான் உள்ளம் - உள்ளம் சோர்வடைய மாட்டான்.
இளையான் எனினும் - பலராமனுக்கு இளையவன் என்றாலும் (பலராமன்
சொல்லைத் தட்டமாட்டாதவன் என்றாலும்)
இளையாய் நிற்பன் - காவல்காடாக, கட்டுவேலியாக, கவசமாக நிற்பவன்
இளையாய் எண்ணி - எண்ணிய இயற்றாத இகழ்ச்சிக்குரியவனாய் நினைத்து
இளையாய் இகழாதே - அற்பத்தனமாய் இகழ்ந்துவிடாதே
உளம் இளைக - கொண்ட எண்ணத்தைக் கைவிடுக
இளை அளந்தான் - பூமியை அளந்தவன்
விளைவாய் நிறைவான் - எங்கும் எதிலும் ஏற்படும் எல்லாமுமாய்
நிறைந்திருப்பவன்.

No comments:

Post a Comment