Jul 17, 2014

மனப்போக்கு

      எனக்கென்ன பாட்டெழுதத் தோன்றிடினு மாங்குமுன் வந்தமையு மருஞ்சந்தமு மதற்கேற்றாற்போ லமையுஞ் சொற்களு மச்சொற்களின் பிரிதன்மைப் பொருளுஞ் சேர்தன்மைப் பொருளு மாங்காங்கே விரவி யகத்தின்மகிழ்வைச் சேர்த்தழகு பார்க்கு மருந்தமிழே வுனையல்லால் வேறுயாரை யென்னுள்ளே யெப்போது மெண்ணிக் கொண்டிருப்பேன்?
    எக்காலு முன்னையே யெண்ணி யெண்ணி மகிழ்வுகொண்டிருக்கு மிவ்வுயிர் செய்த தவப்பயன்றா னென்ன? ஏதுமிவ்வுலகில் வேண்டாமென யெண்ணு மளவுக்கென் னுள்ளத்தை வயப்படுத்தி யேதோ வுளறுகிறே னென்றுபிற ரெண்ணு மளவுக்காளாக்கி விட்டனை. இதற்கியா னின்பங் கொளவா துயர்கொளவா யென்பதைப் பற்றியு மெண்ணுதற் கென்மன மொப்பவில்லை.

No comments:

Post a Comment