Aug 12, 2014

இழப்பும் அச்சமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், 

தொலைந்த தென்றதோ ருண்மையினும்
    தொலைக்கப் போகிறோம் என்பதனால்
தொலைத்து விடுகிற வாழ்வினிலே
    தோய்ந்த வச்சமென் செய்வேனோ?
தொலைத்தல் தோல்வியும் வெற்றியுமாய்த்
    தொலைந்த தொலைவத னுள்ளடங்கும்
குலைக்கச் செய்வது மதன்வேரில்
       குடியி ருக்குமப் பயந்தானே
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


மா-விளம்-காய்

No comments:

Post a Comment