Aug 5, 2014

இஃது என் வாழ்க்கை?

கலிவிருத்தம்

ஒன்றி னுள்ளே வொன்றிய காலே
பின்னொன் றுள்ளே யுள்ளஞ் செல்லே
னென்ற மிழ்ந்த டம்பி டிக்கக்
கன்றுள் ளத்தன் கருத்தா யாமே


அக்க ருத்த ழிந்த பின்னே
அக்க ரந்தான் மாறிச் செல்ல
அக்க ரையாற் றுச்செல் வந்தான்
அக்க றைநெஞ் சுள்ளே செல்லும்


இங்ஙன மாகக் கணத்திற் கொன்றாய்க்
கங்கணங் கட்டிக் கொண்டே றெண்ணம்
தங்கவி டாதே யொன்றிலு மொன்றாய்
எங்ஙன மறிவே னிஃதென் வாழ்க்கை?
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment