Jan 12, 2015

தேவதை (பண்ணத்தி)

அழகுச்சிலை என் அருகில் வந்ததே!
பழகுதமிழ்ப் பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
நெஞ்சில் ஒரு களங்கண்டாள்
களர்நிலம் கலைமிகு விளைநிலம்
வித்துதான் வியப்புகொள் முத்துதான்

அவள்தான் உலகில் தேவதை
அவள்தன் கண்களின் நேரலை
காணாமல் போனது கவின்நிலா 
நாணாமல் போகுமோ? கவிழ்நிலா

பேசிய ஒரு மொழிப் புன்னகை மின்னலில் 
உதடுகள் தாமரை வேண்டுமோ இனிமறை?
காதலோ? காதலோ? கண்களில் மோதலோ?
தாகந்தான் நெஞ்சிலே! தவிப்புகள் உதட்டிலே!
                        - தமிழகழ்வன்

No comments:

Post a Comment