Jan 12, 2015

ஆசையா? ஆசுவா?

நிலைமண்டில ஆசிரியப்பா

நெஞ்சமே நெஞ்சமே நினைவுகள் கொஞ்சமே
ஆசைகள் தஞ்சமே ஆழ்மனம் பொங்குமே!
கனவிலே காண்பது கருத்தினில் கலந்தது
வாய்ப்புகள் என்பன வாய்ப்பதே இல்லையோ?
ஏங்கும் என் எண்ணங்கள் எனக்குள்ளே புதைந்தன
தாங்குமோ ஆழ்மனம் தூண்டுமே மேல்மனம்
என்மனம் இங்ஙனம் எழுத்திலே உதிர்ந்ததும்
இலகிடும் சிறிதுநாள் இன்னிசைப் பொன்மனம்
ஆசைகள் வேண்டுமோ? ஆசுதான் நீங்குமோ?
மாசுகள் என்பன மனதுதான் அறியுமோ?
புண்படும் எளிதிலே புற்றனம் புரைமனம்
பண்படும் என்றுதான்? பகுத்தறி வூட்டியே!
                      - தமிழகழ்வன்

No comments:

Post a Comment