Jun 6, 2015

நினைக்காமல்தான் இருப்பேனோ?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நினைக்கா மற்றா னிருப்பேனோ?
   நினைவி னின்ற கற்றுவனோ?
எனைத்தா னற்றம் வரையிலுன்றன்
   நினைவாற் பிணைத்தி ருக்கின்றேன்
அனைத்தாய் மற்றும் அடங்காத
   அண்டத் தளவா யகம்நிறைத்தேன்
உனைத்தா னெற்றைக் கியானுறுவன்
   உரைப்பாய் என்றன் கார்முகிலே!
      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்: நினைக்காமல்தான் இருப்பேனோ? நினைவினின்று அகற்றுவனோ? எனைத்தான் அற்றம் (அழிவு, முடிவு) வரையில் உன்றன் நினைவால் பிணைத்திருக்கின்றேன். அனைத்துமாகவும் அடங்காத அண்டத்து அளவாகவும் அகம்(உள்ளம்) நிறைத்தேன். உனைத்தான் எற்றைக்கு (என்று, எப்போது) உறுவேன் (பெறுவேன்)? உரைப்பாய் என்றன் கார்முகிலே!

நினைக்காமற்றான் - நினைக்காமல்தான் (லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றோ டுறழ்வும்)
எற்றைக்கியானுறுவன் - எற்றைக்கு யானுறுவன் - குற்றியலிகரம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமும் அருமை...

Post a Comment