Jun 22, 2015

இனிய இரவு - நனிமகிழ் கனவு

நேரிசை வெண்பா

என்றாய்த் தமிழே யிவைபோது மின்றெனக்கு
நன்றாய்க் கண்வளரத் தாலாட்டிப் - பொன்றா
வளனிறை வானிசை பாத்தேன் கனவுக்
களனிறையக் காணச்செய் கா
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தாய்த்தமிழே! இவை போதும் இன்று எனக்கு; நன்றாய்க் கண்வளர (கண்ணுறங்க) தால்(நாக்கு) ஆட்டிப் பொன்றா (அழியா) வளன் நிறை வான் இசை(புகழ்) பாத்தேன் (பாட்டுத் தேன்) கா(சோலை) கனவுக்  களன் நிறையக் காணச் செய்வாயாக.

2 comments:

Post a Comment