Jun 30, 2015

வேண்டுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்னிறைவா! என்னுள் உறைவோய்!
  என்னெண்ணம் யாதென் றறிவை!
தன்னிறைவு யான்பெற் றிடவே
  தங்கைதன் னுள்ளக் குறைதீர்
சொன்னயத்தா! என்றன் வேண்டல்
  சேர்ந்தருள்வாய்! சோர்வை நீக்கு!
என்னெனினும் எந்தம் முயற்சி
  ஏதுமிலை அருள வேண்டும்!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

Post a Comment