Jul 27, 2015

திரு ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

நேரிசை ஆசிரியப்பா

என்செய் திடூஉம் உலகினி உன்றன்
பொன்சொல் மொழிக்கேங் கிடுமென் றறிவையோ?
இளந்தலை முறைக்கோர் அறிவியல் தந்தை
வளந்தலை முறைக்கும் வாய்த்திட வாய்த்தனை
அறிவியல் தாய்தன் அருங்குழந் தைமுகம்
அறிவித் தனளுல கினுக்கே அப்துல்
கலாஅம் இனியே எலாஅம் என்றாள்
நெஞ்சம் வானியல் அதனுள் தஞ்சம்
நுண்ணிய அணுவும் நின்பெயர் சொல்லும்
இனிய சொல்லினை; மென்மை பொருந்தினை;
பாரதம் தனதெதிர் காலம் பற்றி
நீருரைத் தவைநன வாகிடும் நாளை
அதுகா ணாததற் குள்ளே
வான்றோய்ந் தனையே வையம் விட்டே!
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

Post a Comment