Sep 27, 2015

வாணிகமும் இயற்கைச் சீரழிவும்

நேரிசை ஆசிரியப்பா

நானில நன்மை சிறிதுங் கருதா
மானிடர் சிலர்தம் மாவிடர் சேர்க்கும்
வாணிக நெஞ்சுதன் வளத்தைப் பெருக்கிக்
காணலுங் கருமங் காத்தலுங் கோளெனக்
காணா திருத்தல் கவினியற் கைதன்
அழிவுக்(கு) ஆக்கம் ஆக்கும் அஞ்சாப்
பழிசேர் மூடர் பண்பிலார்
விழியொளி பெறாஅர் வீணே வீணே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment