Sep 9, 2015

கடலும் உள்ளமும் (வெள்ளொத்தாழிசை)

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; நிலையின்றிக்
கத்து தலைக்கொண்டு காவல்கை யற்றன;வ
கத்துத் தளைகொண்டு கா

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; பொதியுள்சங்

கத்தமிழ் பேரொலி கட்பொருள் கொள்க;வ
கத்தமிழ் பேரொளி காண்

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; உளதன்ன

கத்தெண்  ணிலாத வளங்கள்; வளங்களுள
கத்தென் னிலாத வளம்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:


ஆழிசை கடல் உள்ளம் ஒத்த - பெரும் சத்தத்தை ஏற்படுத்தும் கடலும் உள்ளமும் ஒத்த தன்மையன.

ஏனெனில்,
1. நிலையின்றிக் கத்துதலைக் கொண்டு காவல் கையற்றன
2. பொதியுள் சங்கத்து அமிழ் பேரொலி கட்பொருள் கொள்க (சங்கினின்று எழும் பேரொலி, சங்கத்தினின்று எழும் பெருமுழக்கம் - எழுதலுக்குக் காரணம் அமிழ்ந்திருத்தல் எனக் கொண்டு) 
3. உள தன்னகத்து எண்ணிலாத வளங்கள்

1. அகத்துத் தளைகொண்டு கா - மனத்தைக் கட்டுப்படுத்திக் காக்க

2. அகத்து அமிழ் பேரொளி காண் - மனத்தில் இருக்கும் பேரொளியை அறிந்துகொள்க
3. வளங்களுள் அகத்து இலாத வளம் என்? (என்று அறிக) - அவ்வளங்களுள் மனத்தில் இல்லாத வளம் என்ன என்று ஆய்க.

No comments:

Post a Comment