Oct 23, 2015

கால ஓட்டக் காட்டாற்று வெள்ளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா

காலோட்டக் காட்டாற்று வெள்ளமது கரைகளையும் கரைத்துக் காட்டும்
மேலோட்ட மாய்க்காணச் 'செருக்குற்ற வாழ்வுனது மெலியார் தம்மைக்
கோலோச்சும் அதிகாரம் கொண்டாய்நீ' எனச்சொல்லும் குறைகா ணுள்ளத்
தாலோட்டம் நிற்காது தடைகளெலாம் கடந்துசெலும் தனித்தன் மையே!
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment