Nov 23, 2015

முருகா!

கட்டளைக் கலித்துறை

அருவாய் உருவாய் அருளாய் ஒளியாய் அகத்துறையும்
பொருளாய்ப் பொருள்தன் பொருளாய்ப் பொலியும் பொழில்விருப்பக்
கருவாய்க் குருவாய்க் கனியாய்க் கனிவாய்க் கனிந்தவனே!
திருவாய்த் திறமாய்த் திருவாய் மொழியாய்த் திகழ்குகனே!
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

RPSINGH said...

வாழ்த்துகள்...இனிமையான ,இயல்பான வரிகள்...எழுத்தெண்ணிப் பாடுங்கலை தங்களுக்கு இயல்பாய் வருகிறது

Post a Comment