Dec 25, 2015

மாரி கழிந்தது

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

மாரி கழிந்தது மாவிமஞ் சூழ்ந்தது
நீரில் உறங்கும் நெடுமாலை நாம்பாடித்
தேரின் மனத்தெண்ணம் தெள்ளியசொல் செந்நாவில்
சேரின் அதன்பொருட்டே செய்செயலும் மாறாமல்
போரில் புனிதமிகு பொன்னுலகை நாம்படைத்(து)
ஓரில் ஒருகுடை ஓருளமென்(று) ஓர்ந்துயர்ந்து
சீரிளமைச் செந்தமிழ்ப்பா தித்திக்கத் தாலாட்டும்
மாரி நனைந்தே மகிழ்வோடு வாழ்குவமே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment