Dec 31, 2015

வீரன்

வீரன் என்பவன் யாரடா
வினைகள் தீர்ப்பவன் பாரடா
பாரம் என்றும் எனக்கில்லை
பயமோ ஓடும் பார்த்தெல்லை
 
கடலும் மலையும் மடுவாகும்
கடந்திடும் இரும்பு மனமாகும்
கடவுள் அவனைப் படைத்திடவும்
கையில் ஆயுதம் எடுத்திடுவேன்
 
கொண்ட செயலை ஓரெண்ணம்
கொண்டே முடிப்பேன் காரென்னும்
அண்டும் வாழ்க்கை எனக்கில்லை
அகிலம் எனக்கு மேலில்லை.
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment