Feb 14, 2016

இசைத்தமிழ்க் கவிதை

தரவு கொச்சகக் கலிப்பா

கவிதைநதி கட்டற்றுக் கானகமெல் லாமோடிப்
புவிதனிலே புனிதருக்குள் புன்னகையைச் சேர்த்திடுமே!
செவியதற்கோர் இன்பூற்றுச் செழுமையினால் இசைத்தமிழை
நவில்நாவின் பெருமையினை நான்பாடி நாடுவனே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment