Mar 15, 2016

ஒற்றிலா வெண்பா

நேரிசை வெண்பா 

திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது.
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

பிரித்தறிய:

திகழ் திகழ் தலை தெளி யருள் தன்னால் அகடும் முகடும் அறியா அகட 
இகழ்தக விதம் இதனை எழுத அகழ்தக விதம்  அது.

Mar 6, 2016

ஆசானைப் போற்றுவோம்

நேரிசை வெண்பா 

தருவாய்த் தரும்வாய்; தகுதமிழ்த் தேனீ
தருக்கள் பலவாய்த் தழைக்கக் - கருவாய் 
வரந்தரும்  ஆசான் வரத இராசர் 
மரபினைப் போற்றும் வழி 
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
------------------
தகுந்த தமிழ்த்தேனைத் தரும் மரங்களைப் பலவாறாகத் தழைக்கச் செய்யும் ஆதியாக வரம் தரும் ஆசான் வரதராசனார் மரபினைப் போற்றும் வழியில் மரத்தைப் போலத் தம்வாய்மொழியால் தமிழ் தருவோம்.
ஈ தருக்கள் - வினைத்தொகை.
-----------------
மரத்தைப் போலத் தன் வாய்மொழியால் தமிழைத் தருவார்;
தகுந்த தமிழ்த் தேனீ;
மரங்கள் பலவாய்த் தழைக்கப் பேருதவி புரியும் ஆதியாக வரம் தரும் ஆசான் 
மரபு கவிதையைப் போற்றிப் பாதுகாக்கும் வழியை அமைத்துக் கொடுப்பவர்