Apr 4, 2016

ஆனந்தக் களிப்பு

சிந்தனை செய்கைசொல் ஒன்றாய் - நின்று
சீரிய வாழ்வினைக் கொண்டுசெல் நன்றாய்!
தந்தையும் தாயும்காண்  தெய்வம் - அந்தத்
தாரணி என்பாரைப் போற்றியே உய்வம்                           1

கந்தனை உள்ளத்துக் கொண்டேன் - அந்தக்
காந்தனைச் செந்தமிழ்ச் சொல்லுக்குள் கண்டேன்
எந்துணை என்றும வன்றான் - எதிர் 
ஏதேதும் துன்பமும் தந்திட நின்றால்                                 2
       
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

No comments:

Post a Comment