Apr 29, 2016

வளையற்சிந்து - தூது

தென்றலினை நெஞ்சுதனைச்
  செந்தமிழை முகிலை - மான்
  சேர்பணத்தைக் குயிலைக் - கிளி
  செம்மலரைத் துகிலைத் - தூது
 சேர்த்திடவே ஏவிடுவார்
 செவ்வேலோன்  மயிலை


அன்னம்புகை யிலைவிறலி
 அரவஞ்சேர் வண்டு - காக்கை
 அருநாரை நண்டு - நெல்
 அரும்பலவாம் கொண்டு - பேர்
 அழகுமாலை கொண்டுவாராய்
 அகங்குளிரக் கண்டு

         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment