Apr 15, 2016

அதுகவிதை?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
      மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
கலைநுட்பம் கற்றுணராக் கருத்துக் காலக்
      கவிதைசெயப் புறப்பட்டுக் கண்டெ டுத்த
அலைபட்ட நெஞ்சன்ன அழகே இல்லா
       அதுகவிதை புதுக்கவிதை கவிதை வேறென்?
 கலைக்கொலையைக் கண்டுள்ளம் கவன்றே சொல்வன்
       கவியழகைக் காணாத கவியும் ஏனோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment