Jan 6, 2018

பாக்களால் பக்குவம் செய்

கட்டுண்டு கிடப்பானேன்?
கட்டவிழ்ந்து மலர்ந்தால்தான் மலரென்றாகும்
மொட்டென்று சொல்வானேன்?
முளைக்கவே அஞ்சுவதோ?
மூடித் துஞ்சுவதோ?
கவிதைக் கழனிக்குக்
கருத்து நீரிறைக்க
எண்ணக் கிணறூறும்
ஏற்றம் எழில்காணும்
குற்றங்கள் குட்டுப்பட்டு
நற்றவந் தளிர்க்கக்
கொட்டிவிடு எண்ணியன
கரையேதும் இல்லை காலெடுத்து வைக்க
கறையென்றெண்ணிச்
சுரந்தன கரந்துவிடாது காக்க
கறையுமில்லை குறையுமில்லை
நிறையோடு நிமிர்ந்துநில்
நெடிதுநோக்கிக் கடிதில் செயல்படு
நொடிக்கு நொடி மாற
மாற்றங்கள் எவ்வளவோ காணும் ஏற்றங்கள்
தீச்சிறகுகளை விரித்துத்
தீமைகளை அழித்துவிடு
பாச்சிறகுகளால் இந்தப்
பாரினைப் பக்குவம் செய்துவிடு
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி

No comments:

Post a Comment