Oct 9, 2018

இரேவதி ஆசிரியை - இரங்கற்பா (25.09.2018)

எம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை இரேவதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரங்கற்பா

ஆசுஇரியும் ஆசிரியை ஆர்வமுடன் பேசுமெங்கள்
மாசுஇரியும் மாமேதை மாணிக்கத் தேவதைஉன் 
பாசத்தை யாமறவோம் பண்பான இரேவதியார் 
பேசுமுகம் என்றினியாம் காண்போமோ காண்போமோ?           1

பட்டங்கள் பெற்றாலும் பகுத்தறிவு பெற்றாலும் 
சட்டங்கள் செய்தாலும் சரித்திரமே செய்தாலும் 
பட்டறிவு கற்பித்த பாசமிகு இரேவதியார் 
உள்தூணாய் இருப்பாரை உளமார வணங்குகிறேன்                      2

அருமையென்(று) உணர்ந்த எம்மை 
      அருமையென்(று) உலகம் போற்றப்
பெருமையெய் திடச்செய்(து) அன்பின் 
      பெருவழி தன்னில் காத்தே
இருளெனக் கிடந்த எல்லாம் 
       இரிந்திடச் செய்தாய் போற்றி
மருளெனப் பட்ட யாவும் 
       மருண்டிடச் செய்தாய் போற்றி                                                          3

எண்களும் எழுத்தும் சொல்லி 
      ஏற்றத்தை வாழ்வில் காட்டிப் 
பண்களில் நீதி சொல்லிப் 
      பாதையில் உண்மை சொல்லிக் 
கண்களில் வாழும் எங்கள் 
      கனிவான சோதி நீங்கள் 
கண்களில் நீரைக் காட்டிக் 
      கதறிடும் நிலையில் யாமே                                                                   4
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment