Oct 9, 2018

துயரந்தான் வாழ்வே மாதோ

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

துளியில்லா வானம் என்னின்
     துவண்டுவிடும் பூமி போலத்
தெளிவில்லா மமதை கொண்டால்
     தென்படுவ(து) ஒன்றும் இல்லை
கிளிப்பிள்ளை போலப் பேச்சு

     கிளைத்திருக்கக் கண்ட சிந்தை
துளிகூடச் சிந்திக் காதோ
     துயரந்தான் வாழ்வே மாதோ
                      
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment