Oct 10, 2018

நல்லாசிரியர் திருப்பூர் பழனிச்சாமி ஐயா

திருப்பூர் நஞ்சப்பா மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஐயா அவர்கள் நல்லாசிரியர்  விருது பெற்றமைக்காக வாழ்த்து 


வெல்வேல் கைக்கொள் வேந்தன் என்னச்
சொல்வேல் செந்நா சோர்வு நீக்கக்
கல்வியும் ஒழுக்கமும் கற்பிக் கின்ற
உயர்திரு பழனிச் சாமி ஐயா
உயர்வழி காட்டும் ஒருபே ராளர்

அவர்
திருவிளங்கு பேரூர் திருப்பூர் தன்னில்
ஒருதனிச் சிறப்பின் ஓங்கிய பள்ளி
நஞ்சப்பா ஆண்கள் மேனிலைப் பள்ளி
ஆளும் தலைமை ஆசான் ஆவார்

அவர்
பாரத நாட்டின் பண்பைக் காக்கும்
வேரென விளங்கும் உயர்மா ணாக்கர்
ஆய அரும்பெரும் தூண்களைச் செதுக்கும்
பள்ளிகள் சிறக்கப் பண்பொடு கல்வி
ஊட்டி வளர்க்கும் உயர்ந்த ஆசிரியர்
தம்மைப் பாராட்டித் தனிச்சிறப்பு செய்யும்
அரசால் நல்லா சிரியர் விருது
பெற்றார் பெற்றார் பெருவாழ்வு வாழ்கெனக்

காற்றின் வழியே கடிதில் செல்லும்
தகவல் நுட்பம் வாய்கா லத்து
மெய்யே யன்றி மெய்ந்நிக ராகக்
கைகளைக் குலுக்கி வாழ்த்துகின் றேனே

No comments:

Post a Comment